மலேசியரான ரிசல்மான் தனியா பில்லிங்ஸ்லே என்ற நியூசிலாந்துப் பெண்ணைப் பின் தொடர்ந்து அவரது வீடு வரை ஏன் சென்றார்? என அந்நாட்டின் அரச வழக்கறிஞர் (Crown prosecutor) கிராண்ட் பர்ஸ்டன் நீதிமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, ரிசல்மான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
தன்னைப் பார்த்து பில்லிக்ஸ்லே சிரித்ததால், தனக்கு அவர் சமிஞ்கை அளிக்கிறார் என நினைத்துக் கொண்டதாக ரிசல்மான் தெரிவித்துள்ளார்.
“அவரது பேச்சில் தெரியவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் புன்னகைத்த விதம் அவ்வாறு நினைக்க வைத்தது. மலேசிய வழக்கத்தில், ஒரு பெண் ஆணைப் பார்த்து சிரித்தால், அந்த ஆணைப் பற்றி தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறாள் என்று அர்த்தம்” என்று ரிசல்மான் கூறியுள்ளார்.