Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம் – சனிக்கிழமை காலை இறுதி நிலவரம்!

சென்னை வெள்ளம் – சனிக்கிழமை காலை இறுதி நிலவரம்!

487
0
SHARE
Ad

Chennai Floods-1சென்னை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை நகரில், இந்தப் பேரிடர் தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி (மலேசிய நேரம்) வரையிலான இறுதி நிலவரச் செய்திகள் – சில வரிகளில்!

  • இன்று முதல் நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர பேருந்துப் பயணங்களுக்கு சென்னையில் கட்டணமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
  • 53 இராணுவக் குழுக்கள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன
  • மீட்புப் பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தொடர்ந்து இடையிடையே பெய்யும் மழையால் இடையூறுகள்
  • 16,500 பேர் இராணுவம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் பணிக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
  • தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களின் எண்ணிக்கையை 49ஆக அதிகரிக்க நடவடிக்கை
  • இன்று முதல் சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி பயணச் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும்
  • நாளை முதல் விமான நிலையம் முழுமையாக இயங்கும் என அறிவிப்பு
  • இலவச மருத்துவ சேவை வழங்குவதற்கு அப்போல்லோ மருத்துவமனை முன்வந்தது
  • பால் விநியோகம் கிடைக்கவில்லை என்ற புகார்களைத் தொடர்ந்து 14 பால் விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.