முன்னதாக கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் உரையாற்றிய சுந்தர் பிச்சை, கூகுள் செயல்திட்டங்கள் மூலம் அடுத்த 3 வருடங்களில், 3 லட்சம் இந்திய கிராமங்களை இணையத்தால் இணைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் இருக்கும் 100 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியையும், கூகுள் செயல்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஐதராபாத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய தொழில்நுட்ப வளாகம் ஒன்றை கூகுள் அமைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Comments