Home Featured உலகம் ஏர் ஆசியா QZ8501 விபத்து: ஏர் ஆசியா மீது பலியானோர் குடும்பத்தார் ஆவேசம்!

ஏர் ஆசியா QZ8501 விபத்து: ஏர் ஆசியா மீது பலியானோர் குடும்பத்தார் ஆவேசம்!

513
0
SHARE
Ad

air asiaஜகார்த்தா – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலியானோருக்கு சமீபத்தில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பலியான பயணிகளின் குடும்பத்தார், ஏர் ஆசியா நிறுவனம், நடந்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்தோனேசியாவின் முக்கிய நகரமான சுரபாயவில, நடந்த அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மட்டுமல்லாது ஏர் ஆசியாவின் அதிகாரிகளும் கலந்து கொண்டு இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். அப்போது, “ஏர் ஆசியா அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஏர் ஆசியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஏர் ஆசியா QZ8501 விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய இந்தோனேசிய விசாரணைக் குழு, “விமானப் பணியாளர்களின் நடவடிக்கையால் விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. இதனால் அது இயல்பான விமான இயக்கத்தில் இருந்து விலகி நீண்ட நிறுத்த நிலைக்கு மாறியுள்ளது. அந்நிலை விமானப் பணியாளர்களால் சரி செய்ய இயலாத ஒரு நிலை” என்று தெரிவித்து இருந்தது.

#TamilSchoolmychoice

air asia1கவனமின்மையால் ஏற்பட்ட விபரீதம், 162 உயிர்களை பலிவாங்கியது. இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட குடும்பத்தார், ஏர் ஆசியாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். மேலும் அவர்கள், சுரபயா-சிங்கப்பூர் விமான வழித்தடத்தில் பாதுகாப்பை பலப்படுத்திய பிறகு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரை அந்த வழித்தடத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எனினும், அவர்களின் கோரிக்கை தொடர்பாக அங்கு கூடி இருந்த ஏர் ஆசியா நிர்வாகிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.