மறைந்த சவுதி அரேபியா அரசர் கிங் அப்துல்லா தனது தனிப்பட்ட நிதி மற்றும் மாநில நிதியில் இருந்து அத்தொகையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடமிருந்து தகவலைப் பெற்றுள்ளது பிபிசி செய்தி நிறுவனம்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அந்நிதி வழங்கப்பட்டதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
எனினும், சவுதி அரேபியாவின் நிதியமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த தலைவர்கள், அந்நிதி பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளதாக ‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.