Home Featured தமிழ் நாடு பாஜக-தேமுதிக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – சரத்குமார்!

பாஜக-தேமுதிக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – சரத்குமார்!

551
0
SHARE
Ad

sarathkumar,சென்னை – பாஜக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். மேலும், தேமுதிக வந்தால் பாஜக அணி மெகா கூட்டணியாக அமையும்.

அதிமுக கூட்டணியில் நான் இருந்தபோது, அரசியல் ரீதியாக விஜயகாந்தை விமர்சித்திருப்பேன். விஜயகாந்த் எனது பாசத்துக்குரிய சகோதரர். சமத்துவ மக்கள் கட்சியினரிடம் இருந்து 2,567 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு புதன்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது. சமகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

#TamilSchoolmychoice