Home Featured இந்தியா பனிச் சரிவில் காணாமல் போன மற்றொரு இந்திய இராணுவ வீரரும் பலி!

பனிச் சரிவில் காணாமல் போன மற்றொரு இந்திய இராணுவ வீரரும் பலி!

884
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் சியாச்சென் பனிப் பிரதேசத்தில், இராணுவ முகாம் ஒன்றின் அருகில் நிகழ்ந்த பனிச் சரிவில் இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர்.

Siachen glacier-mapசியாச்சென் பனிப் பிரதேசத்தைக் காட்டும் வரைபடம்…

அவர்களில் ஒருவர் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இன்று கண்டெடுக்கப்பட்டார். இருப்பினும், கடுமையான காயங்கள் காரணமாக அவர் உயிர் பிழைக்கவில்லை. அவரது பெயர் பவான் தமாங் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மற்றொரு வீரரைத் தேடும் பணி இன்னும் தொடர்ந்து வருகின்றது.

இன்று காலை 7.30 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த பனிச் சரிவு ஏற்பட்டது.