Home Featured நாடு கடத்தப்பட்ட 7000 டன் நிலக்கரி மிதவை லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டது!

கடத்தப்பட்ட 7000 டன் நிலக்கரி மிதவை லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டது!

582
0
SHARE
Ad

MMEA.transformedகோலாலம்பூர் – சுமார் 7,000 டன் நிலக்கரி கொண்ட மிதவை ஒன்று, நேற்று சபாவின் லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மாவட்ட தலைமை அதிகாரி ரசாக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26-ம் தேதி, மலேசிய எல்லையில் பிலிப்பைன்சின் அபு சயாப் இயக்கத்தினரால், தைவான் படகு ஒன்று கடத்தப்பட்டது.

அதிலிருந்த 10 இந்தோனேசியப் பணியாளர்களை சிறைபிடித்த தீவிரவாதிகள், அவர்களின் படகை அப்படியே கடலில் விட்டுச் சென்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அப்படகு இழுத்துச் சென்ற 7000 டன் நிலக்கரி மிதவையையும் தற்போது அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதனிடையே, கடத்தி வைக்கப்பட்டுள்ள பணியாளர்களை விடுவிக்க, அபு சயாப் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கேட்பதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: MMEA