இதனைத்த தொடர்ந்து இவர்களைத் தவிர மேலும் 500க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்கள், பிரபலங்கள் இத்தகைய பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சட்டத்துக்குப் புறம்பாக, உரிய அரசாங்க அனுமதிகள் பெறாமல் யாராவது வெளிநாட்டுக் கணக்குகள் வைத்திருந்தாலோ, பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.
இந்த ஆவணங்களில் பிரதமர் நஜிப்பின் இரண்டாவது மகன் முகமட் நசிபுடின் தொடர்பான பணப் பரிமாற்றங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.