Home Featured உலகம் ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையத்தில் பதட்டநிலை!

ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையத்தில் பதட்டநிலை!

608
0
SHARE
Ad

AMS-MAIN-SCHIPOL-ENTRY-EXT-5ஆம்ஸ்டெர்டாம் -சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக, ஆம்ஸ்டெர்டாமின் ஷிபோல் விமானநிலையத்திற்கு, செவ்வாய் இரவு (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஆயுதமேந்திய இராணுப்படை அதிரடியாக நுழைந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது.

அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்களும் அந்நபரின் பெட்டிகளை ஆய்வு செய்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதி திடீரென அடைக்கப்பட்டதால், பயணிகளும் கார் நிறுத்துமிடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனினும், இது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.