Home Featured தமிழ் நாடு தேர்தலில் பணம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் – கோவிலில் விஜயகாந்த் உறுதிமொழி!

தேர்தலில் பணம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் – கோவிலில் விஜயகாந்த் உறுதிமொழி!

554
0
SHARE
Ad

vijayakanthஉளுந்தூர்பேட்டை – சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் வாக்காளர்களுக்கு கொடுக்க, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.100 கோடியை எட்டுகிறது.

அத்துடன் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் உணவுப் பொட்டலங்களுக்குள் பணம் வைத்து கொடுப்பது, பணத்துக்கு பதிலாக பெட்ரோல் போடுவதற்கான டோக்கன்கள் கொடுப்பது என புதுபுது வியூகங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

பிரதான கட்சிகளான ஆளும் அதிமுக, திமுக தான் இத்தகைய வழிமுறைகளை கடைபிடிப்பதாக தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார்.

vijayakanth45அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன் என சாமி சிலை முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக தேமுதிகவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் படத்துடன் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் ரூ.1,500 கோடி பணத்தை அதிமுக மேலிடம் கொடுத்ததாக பரபரப்பான புகார் கிளம்பியிருந்தது.

இதற்காகத்தான் அவர் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேமுதிகவுடன் கூட்டணி வைத்தார் எனவும் கூறப்பட்டது. இதே குற்றச்சாட்டை விஜயகாந்திடம் இருந்து பிரிந்து வந்த சந்திரகுமாரும் ஊடகங்களில் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.