ஏரியின் அருகே நடந்து கொண்டிருந்த அச்சிறுவனை முதலை ஒன்று தாக்கி, உள்ளே இழுத்துச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அச்சிறுவனின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அவனது தந்தை, உடனடியாக ஏரியில் குதித்து, முதலையிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரால் தனது மகனை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சிறுவனை முதலை இழுத்துச் சென்று பல மணி நேரங்கள் ஆகிவிட்டதால், உயிரோடு கிடைக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments