Home Featured நாடு சங்கப் பதிவகத்தின் மீதான பழனிவேல் தரப்பினரின் வழக்கு விசாரணை!

சங்கப் பதிவகத்தின் மீதான பழனிவேல் தரப்பினரின் வழக்கு விசாரணை!

520
0
SHARE
Ad

MIC Logo 440 x 215கோலாலம்பூர் – சங்கப் பதிவகத்தின் முடிவுகள் தொடர்பில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

போதிய சட்ட அடிப்படைகள் இல்லாத காரணத்தால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென சங்கப் பதிகவத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கும் விண்ணப்பம் இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.