Home Featured கலையுலகம் நடிகர் கானா மீது வழக்கு: 800 ரிங்கிட் அபராதம் விதித்தது நீதிமன்றம்!

நடிகர் கானா மீது வழக்கு: 800 ரிங்கிட் அபராதம் விதித்தது நீதிமன்றம்!

850
0
SHARE
Ad

Ganaகோலாலம்பூர் – கடந்த வாரம் குடியிருப்புப் பகுதியில் இருந்த பாதுகாவலர் அலுவலகத்தில், 35 ரிங்கிட் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலியை சேதப்படுத்தியதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், பிரபல மலேசிய நடிகர் எஸ்.கானா பிரகாசத்திற்கு  குற்றவியல் நீதிமன்றத்தில் 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி சாலாமியா சாலே முன்பு, கானா தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதால், அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, இரவு 10.20 மணியளவில், ஆரா டாமன்சாரா, ஜாலான் பிஜெயு 1ஏ/1, தாமான் பெருமாஹான் அடில்லியா என்ற குடியிருப்புப் பகுதியின் பாதுகாவலர் அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குற்றவியல் சட்டம், பிரிவு 427-ன் கீழ் இக்குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கும் வகையில் சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.