Home Featured உலகம் முழு பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றார் லீ சியன் லூங்!

முழு பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றார் லீ சியன் லூங்!

956
0
SHARE
Ad

lee hsien loong-taken ill-speech

சிங்கப்பூர் – நேற்று உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திய பின்னர், மீண்டும் மேடைக்குத் திரும்பி உரையைத் தொடர்ந்த சிங்கை பிரதமர் லீ சியன் லூங், நேற்றிரவு 11.30 மணியளவில் தனது உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனைக்காக, பிரதமர் லீ சென்றுள்ளார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இருப்பினும், அவர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது இல்லம் திரும்பி விட்டாரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

(படம்: நேற்றிரவு உரையாற்றிக் கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவை எதிர்நோக்கிய லீயை மற்ற அமைச்சர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற மற்ற சிங்கை அமைச்சர்கள். – படம் : நன்றி -ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்)