Home Featured வணிகம் பற்று அட்டைகளை விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள் – பேங்க் நெகாரா அறிவிப்பு!

பற்று அட்டைகளை விரைவில் மாற்றிக் கொள்ளுங்கள் – பேங்க் நெகாரா அறிவிப்பு!

574
0
SHARE
Ad

credit-cardகோலாலம்பூர் – கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளில் நடைமுறையில் இருந்து வரும் கையெழுத்து முறையை மாற்றி, தனிப்பட்ட அடையாள எண் (personal identification number) கொண்டு வரும் திட்டத்தின் படி, வங்கிகளில், அட்டைகளை மாற்றும் வாடிக்கையாளர்கள் கடைசி நாள் வரையில் காத்திருக்க வேண்டாம் என பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.

காரணம், கடைசி நாளில் அதிகமான வாடிக்கையாளர்கள் வங்கிகளில் நிறைந்துவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதால், வங்கி நிறுவனங்கள் கவலை கொள்வதாகவும் பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் படி, நாட்டில் 8 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களது கடன் மற்றும் பற்று அட்டைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

#TamilSchoolmychoice

எனவே, வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக வங்கிகளிடம் புதிய அட்டைகளை பெற்றுக் கொள்ளும்படி பேங்க் நெகாரா கேட்டுக் கொண்டுள்ளது.