Home One Line P1 வங்கி கடன் ஒத்திவைப்பு: 2 மில்லியன் பேர் விண்ணப்பம்

வங்கி கடன் ஒத்திவைப்பு: 2 மில்லியன் பேர் விண்ணப்பம்

524
0
SHARE
Ad
படம் நன்றி பெர்னாமா: துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹார்
படம் நன்றி பெர்னாமா: துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹார்

கோலாலம்பூர்: கடன்களைச் செலுத்த உதவி தேவைப்படும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாச நீட்டிப்புக்காக வங்கிகளை தொடர்பு கொண்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கள் விண்ணப்பங்களை வழங்கிய 1.1 மில்லியன் கடன் வாங்கியவர்களில், கிட்டத்தட்ட 300,000 பேர் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உண்மையில் உதவி தேவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லா தெரிவித்தார். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக அவர் கூறினார்.

“வழங்கப்பட்ட பல்வேறு வழிகளின் மூலம் கடன் வாங்கியவர்கள் விண்ணப்பிப்பதை அனுப்புவதால், இந்த புள்ளிவிவரங்கள் தொடர்ந்து உயரும்” என்று அவர் இன்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான விண்ணப்ப செயல்முறை ஒன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விண்ணப்பம், மூன்று நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, கொவிட்19 தொற்றுநோயால் 2020-இல் வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடியை  மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு வேலை இழந்தவர்கள் மற்றும் இன்னும் புதிய வேலைவாய்ப்பைப் பெறாதவர்கள் மூன்று மாதங்களுக்கு கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அனுபவிப்பார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு நபரின் நிலைமைக்கும் ஏற்ப அந்தந்த வங்கிகளால் தள்ளுபடிக் காலத்தை நீட்டிக்க முடியும் என்று மொகிதின் குறிப்பிட்டிருந்தார்.

” பணிபுரியும் நபர்களுக்கு, ஆனால் கொவிட் 19 காரணமாக அவர்களின் சம்பளம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது என்றால், கடனின் வகையைப் பொறுத்து சம்பளக் குறைப்பு விகிதத்திற்கு ஏற்ப தவணைகள் குறைக்கப்படும்,” என்று அவர் கூறியிருந்தார்.

பல்வேறு தரப்புகள் இந்த கடன் தள்ளுபடியை மேலும் ஆறு மாதக் காலத்திற்கு நீட்டிக்க பரிந்துரைத்து வரும் நிலையில், நிதி அமைச்சகம் மற்றும் தேசிய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதை பிரதமர் அறிவித்திருந்தார்.