Home Featured தமிழ் நாடு ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது!

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது!

639
0
SHARE
Ad

swathi_ramkumarசென்னை – சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவரது உடல் கூறு ஆய்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்திய நேரப்படி 8 மணியளவில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனையைச் சுற்றி பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice