இந்தோனிசிய அதிகாரிகளுடன் மலேசிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் முழு அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.
ஊகத்தின் அடிப்படையில் தகவல்களைப் பரப்புவதால், நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.
“எல்லா இடங்களிலும், உரங்களை கொண்டு செல்ல கப்பல்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதை ஒரு அசாதாரண விசயமாகக் கருத முடியாது. உரங்கள் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன” என்று காலிட் கூறியுள்ளார்.