கோலாலம்பூர் – பெர்சே அலுவலகத்தில் இன்று மாலை நுழைந்தத மலேசியக் காவல் துறையினரும், நிறுவனங்களுக்கான பதிவிலாகாவினரும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த அலுவலகத்தைப் பூட்டி வைத்துள்ளதோடு, நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைச் சட்டங்களுக்கு புறம்பான ஆவணங்களை அவர்கள் தேடி வருகின்றனர்.
அதே வேளையில், பெர்சே வழக்கறிஞர்கள் யாரும் அலுவலகத்தில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை பெர்சே பேரணி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சோதனைக்குள்ளாகியிருக்கும் பெர்சே அலுவலகத்தில்….(நன்றி: பெர்சே டுவிட்டர் பக்கம்)
Comments