Home Featured நாடு ஆபாசமாகப் பேசினார் தாஜுடின் – தெரேசா குற்றச்சாட்டு!

ஆபாசமாகப் பேசினார் தாஜுடின் – தெரேசா குற்றச்சாட்டு!

866
0
SHARE
Ad

Teresa Kokகோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகக் குறிப்பிட்ட அம்னோ துணையமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் தெரிவித்துள்ளார்.

செபுத்தே-வில் ‘கோக்’ கொண்ட ஒரே பெண் (woman with a “Kok”) என்று விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த துறையின் துணையமைச்சரான தாஜுடின் தன்னைக் குறிப்பிட்டதாக தெரேசா கோக் குற்றம் சாட்டியுள்ளார்.

“அவர் தனது கருத்திற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், பிரதமர் அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்”

#TamilSchoolmychoice

“நான் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவர் அனைத்து ஆபாசக் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரேசா கோக் தெரிவித்துள்ளார்.