Home Featured தமிழ் நாடு வார்தா புயல்: 133 மரங்கள் விழுந்தன – 7 ஆயிரம் பேர் தஞ்சம் – சென்னை...

வார்தா புயல்: 133 மரங்கள் விழுந்தன – 7 ஆயிரம் பேர் தஞ்சம் – சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

652
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரப்படி பிற்பகல் 4.00 மணி நிலவரம்) தமிழகத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள வார்தா புயல், கடும் மழையையும், பலத்த காற்றையும் கொண்டு வந்துள்ளதோடு, பல இடங்களில் கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

vardah-storm-chennai-trees-removed

சென்னை, காமராஜர் சாலை போர் நினைவுச்சின்னம் அருகில்,வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்

#TamilSchoolmychoice

இது தொடர்பான பிற்பகல் 4.00 மணி (மலேசிய நேரம்) வரையிலான நிலவரம் பின்வருமாறு:

  • பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதுவரை 133 மரங்கள் விழுந்துள்ளதாகவும் அவை உடனடியாக வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புயல் காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர், புயலால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் இடங்களிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தின் கரைகளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வார்தா புயல் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

panneer-selvam-chairing-meeting-on-vardah

  • தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வார்தா புயல் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் (மேலே படம்).
  • பல இடங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
  • புயல் கரை கடந்த பின்னரும்  பொதுமக்கள் யாரும் இல்லங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரை கடந்த பின்னரும் சில அபாயங்கள் நேரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

vardah-storm-tamil-nadu-announcement

பொதுமக்களுக்கு தமிழக அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….

  • கடும் மழையைத் தொடர்ந்து, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அப்புறப்படுத்தப்படுகின்றது.
  • சென்னை விமான நிலையம் பிற்பகல் 3.00 மணிவரை (இந்திய நேரம்) மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து அம்மா உணவகங்களும் திறந்து வைக்கப்பட்டு இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.