Home Featured தமிழ் நாடு மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!

மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!

624
0
SHARE
Ad

jallikattuமதுரை – ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்டதால், அதிருப்தியடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சிலர், மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகேயுள்ள கரிசல்குளத்தில் 20-க்கும் மேற்பட்ட காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

படம்: கோப்புப்படம்