Home Featured உலகம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் இரயில் குண்டு வெடிப்பு – 10 பேர் மரணம்!

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் இரயில் குண்டு வெடிப்பு – 10 பேர் மரணம்!

723
0
SHARE
Ad

செயிண்ட்பீட்டர்ஸ்பெர்க் – இரஷியாவின் புகழ்பெற்ற நகர்ப்புற இரயில் நிலையங்களில் ஒன்றான செயிண்ட்பீட்டர்ஸ்பெர்க் நிலையத்தில் இரயில் பெட்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து, இதுவரையில் 10 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

St Petersberg-train stationமாஸ்கோவுக்கு அடுத்து இரஷியாவின் இரண்டாவது பெரிய நகரான செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் இரயில் நிலையம் (கோப்புப் படம்)

50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் மாஸ்கோவுக்கு அடுத்து, இரஷியாவின் இரண்டாவது பெரிய நகராகும்.

#TamilSchoolmychoice

இது குறித்து கருத்துரைத்த இரஷிய அதிபர் விளாடிமிர் புடின், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் இந்த இரயில் வெடிவிபத்து இரஷிய அரசாங்கத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கிறார்.