இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் சிந்தினர்.
பல கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கும் தங்களது நிறுவனத்திடம் சம்பளம் கேட்க முடியாமலும், மாதக் கடைசி என்பதால் குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமலும் நிலைகுலைந்து போயிருந்தனர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை, தங்களது ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத சம்பளம் வழங்கிய அந்நிறுவனம், சென்னை வேளைச்சேரி, கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை என மற்ற கிளைகளில் அந்த ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம் என்றும் அறிவித்திருக்கிறது.