Home Featured தமிழ் நாடு மறைந்த இரா.செழியன் அண்ணாவுடன் மலேசியா வந்தவர்!

மறைந்த இரா.செழியன் அண்ணாவுடன் மலேசியா வந்தவர்!

960
0
SHARE
Ad

Cheliyanசென்னை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் தலைவர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் கோலோச்சிய இரா.செழியன் (வயது 95), தமிழகத்தின் வேலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (6 ஜூன் 2017)  உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை மலேசியா வந்து பல இடங்களில் உரைகள் நிகழ்த்தியபோது அவருடன் செழியனும் மலேசியா வந்திருந்தார்.

அந்த வகையில் அண்ணாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் செழியன்.

#TamilSchoolmychoice

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர் தான் இரா.செழியன். மாணவராக இருந்த போதே திராவிட இயக்கத்தில் இணைந்து பேரறிஞர் அண்ணாவுடன் செயலாற்றினார்.

1962-ல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற செழியன், பின்னர் 1977-ல் தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

பின்னர், 1988-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் என்னும் கட்சி உருவான போது, அதில் செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார்.

அதன் பின்னர், 2001-ம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக செழியன் அறிவித்தார். ஓய்வுக்குப் பின்னரும் கூட, விஐடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவர் – திராவிட பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது சகோதரர் நெடுஞ்செழியன் திமுக, அதிமுகவில் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர் என்றாலும் – செழியனின் அரசியல் அணுகுமுறையும், சித்தாந்தங்களும் அவரைத் தனித்துக் காட்டின.

தமிழக அரசியல் சிலந்தி வலைக்குள் அவரால் இறுதி வரை செயல்பட முடியாமலே போயிற்று. நீண்ட காலம் அரசியல் பார்வையிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார்.

-செல்லியல் தொகுப்பு