Home Featured நாடு கைதி தப்பி ஓட்டம்: 8 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை!

கைதி தப்பி ஓட்டம்: 8 காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை!

1042
0
SHARE
Ad

handcuffஜார்ஜ் டவுன் – போதை வழக்கில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 8 காவல்துறை அதிகாரிகள் மற்றொரு நபருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாலே புலாவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 3 கைதிகளில் ஒருவர் தப்பிச் சென்றார்.

இச்சம்பவத்தின் போது கைதிகள் அழைத்து வரப்பட்ட வேனில் 5 காவல்துறையினர் பணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் மேல் விசாரணை நடைபெற்று வருகின்றது.