இன்று சனிக்கிழமை (15 ஜூலை 2017) காலையில் ஜப்பான்-ஆசியான் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, மலேசிய அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா நிலைகளிலுமான சுகாதார சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
இன்று ஜப்பான் சுகாதார அமைச்சர் குழுவினருக்கும், மலேசியக் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளிலும் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா ஜப்பான் சுகாதார அமைச்சருடன் சுகாதார சேவைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டார்.