இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் கருத்தரங்கம் காலை 9.30 மணி அளவில் தொடங்கியது.
நேரில் வந்து கலந்து கொள்ள இயலாதவர்களின் காணொளி படைப்புகள் முதல் பகுதியில் காட்டப்பட்டன.
இரண்டாம் நாள் கருத்தரங்கின் முகாமை உரையை மலேசியாவின் முத்து நெடுமாறன் வழங்கினார். “கருவாக்கம், உருவாக்கம், விரிவாக்கம்” என்ற தலைப்பில் அவரின் முகாமை உரை அமைந்திருந்தது. ஒரு புத்தாக்கச் சிந்தனையை, அதன் கருவில் இருந்து உருபெறச் செய்து, பயனர்களின் கையில் வெற்றிகரமாகச் சென்றடைவதற்கு, நுட்பவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அவர் தெளிவாக விளக்கினார்.
இரண்டு கட்டுரைகளும் அனைவரின் வரவேற்பைப் பெற்றன. கேள்விகளும் கருத்துகளும் பரிமாறப்பட்டன.
கொங்கு நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரிக்கப்பட்ட எழுத்து, ஒலி, காணொளி வடிவில் உள்ள வரலாற்றுத் தரவுகளை, தொடாண்டோ பல்கலைக்கழகத்தில் நிலையான தரவகமாக (archive) அமைக்க அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி கருத்துரைத்தார்.
மாலையில் நடைபெற்ற இரண்டு தொழில்நுட்ப பயிலரங்குகளைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்சிகள் நிறைவடைந்தன.