Home இந்தியா கௌரி கொலை: 3 முறை வீட்டைச் சுற்றி வந்த கொலையாளி!

கௌரி கொலை: 3 முறை வீட்டைச் சுற்றி வந்த கொலையாளி!

1049
0
SHARE
Ad

Gauri Lankeshபெங்களூர் – கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், தனது வீட்டின் முன், மர்ம நபரால்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், கொலை நடந்த அன்று கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர், கௌரியின் வீட்டின் முன்பு 3 முறை வலம் வந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சுமார் 35 வயது மதிக்கக்கூடிய அந்நபர் வெள்ளை நிறை முழுக்கை சட்டை அணிந்திருந்ததும், பைக்கில் கௌரியின் வீட்டை மூன்று முறை கடந்து சென்றதும் கண்டறியப்பட்டிருக்கிறது.