முன்னதாக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் நேற்றோடு அப்பதவியில் இருந்து விடைபெற்றார்.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து, பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அசாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments