Home உலகம் வடகொரியா ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தவில்லை: ஜப்பான் பிரதமர்

வடகொரியா ஆயுதம் தயாரிப்பதை நிறுத்தவில்லை: ஜப்பான் பிரதமர்

907
0
SHARE
Ad

Japanese Prime Minister Shinzo Abe speaks during a news conference at prime minister's official residence in Tokyo, Japan, 24 December 2014 after forming new cabinet.டோக்கியோ – வடகொரியா கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு ஏவுகணைச் சோதனையையும் நடத்தவில்லை என்றாலும், ஆயுதம் தயாரிப்பதை அது நிறுத்துவது போலான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

மணிலாவில் நேற்று ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா மாநாட்டில் ஆசியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அபே, “அது தொடர்ந்து ஆயுதம் தயாரிப்பதாக நான் நம்புகிறேன். எனவே பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு பயனும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.