Home நாடு சிலாங்கூர் பொது நூலகங்களுக்கு உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்

சிலாங்கூர் பொது நூலகங்களுக்கு உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்

1140
0
SHARE
Ad

ganesan-rawangரவாங் – இவ்வருடம் சிலாங்கூர் மாநில பொது நூலகங்களுக்காக உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தமிழ் புத்தகங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை 25 நவம்பர் 2017-ஆம் நாள் மாலை மணி 4.00-க்கு ரவாங் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளரும், கல்வியாளரும், தன்முனைப்பு உரையாளருமான மு.கணேசனின் (படம்) ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க, தமிழ் ஆர்வலர்களும், ரவாங் வட்டார பொதுமக்களும் அழைக்கப்படுகின்றனர்.