பிரபல மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருவதாகவும், இலவசமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிவதாகவும் கூறி ஐஎஸ் தீவிரவாதிகள் ஊசி மூலம் எச்ஐவி வைரசைப் பரப்புவதாக நட்பு ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
அதனை மறுத்திருக்கும் நூர் ரஷீத், புக்கிட் அம்மான் அவ்வாறான எச்சரிக்கை அறிக்கையை அனுப்பவில்லை என்றும், என்றாலும் வீட்டுக்கு வரும் முன்பின் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் எப்போதுமே எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.