அந்த வகையில் நேற்று புதன்கிழமை ஜோகூர் பாரு தம்போய் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள ஜோகூர் சுல்தான் வருகை தந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 ஜனவரி 2018) அரண்மனையில் தனது குடும்பத்தினருக்காக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுல்தானுக்கு எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டதாக, சுல்தானின் அதிகாரபூர்வ அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜோகூர் சுல்தானோடு அவரது புதல்வர் ஜோகூரின் துங்கு தெமங்கோங் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டாரும் தைப்பூசத்திற்கு வருகை தந்தார்.
ஆலய நிர்வாகத்தினர் சுல்தானுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாலை மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டன.