Home நாடு நாம்வீக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

நாம்வீக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

764
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘நாயைப் போல’ என்ற சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராப் பாடகர் நாம்வீக்கு, நீதிமன்றத்தில் 4 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

வரும் திங்கட்கிழமை வரை நாம்வீ தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என நகர காவல்துறைத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஜைனுடின் யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

தனது சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பாக, புக்கிட் அம்மானில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற நாம்வீ, கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice