Home நாடு காவிரி போராட்டம்: இரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி!

காவிரி போராட்டம்: இரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி!

919
0
SHARE
Ad

திண்டிவனம் – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று புதன்கிழமை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயில் மீது ஏறி போராட்டம் நடத்த முயன்ற இருவரில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.

இறந்தவர் பாமக கட்சியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.