இதனால், முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெறும் நிலையை அடைந்தார்.
இந்நிலையில், ஸ்ரீராம் சின்னசாமி தடுக்கப்பட்டது தொடர்பாக, பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பலர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதோடு, காவல்துறையிலும் புகார் அளித்திருக்கின்றனர்.
அது குறித்து விளக்கமளித்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா, “இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை அறிக்கைக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது. அதுவரை பொதுமக்கள் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.