Home நாடு சரவணன், “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்

சரவணன், “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்

332
0
SHARE
Ad

சிரம்பான் : இங்குள்ள ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, சாலையில், திருமதி ஈஸ்வரி அழகப்பாவின் “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக்கடையை, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 30) மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார்.

“இந்தியர்கள் இது போன்று சொந்தத் தொழிலில் ஈடுபடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் குடும்பத்தில் அனைவரும் ஈடுபட்டு ஒற்றுமையாக தொழில் செய்வது பாராட்டுக்குரியது. திருமதி.ஈஸ்வரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என சரவணன் தெரிவித்தார்.