“வெட்கப்பட வேண்டிய சில பொறுப்பற்ற தரப்புகள், கப்பற்படை ஃபேஸ்புக்கில் நான் கூறிய கருத்தைத் திரித்து, அதனை பொய்யான செய்தியாக்கிவிட்டன” என இன்று வெள்ளிக்கிழமை மதியம் அகமட் கமாருல்ஜமான் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
நேற்று வியாழக்கிழமை அகமட் கமாருல்ஜமான் கூறிய கருத்தைச் சுட்டிக் காட்டிய செய்தி இணையதளம் ஒன்று, அது பக்காத்தான் ஹராப்பானுக்குச் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தது.
இந்நிலையில், அச்செய்தியின் படத்தைச் சுட்டிக் காட்டியிருக்கும் அகமட் கமாருல்ஜமான், அது பொய்யான தகவல் எனத் தெரிவித்திருக்கிறார்.