Home உலகம் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா!

கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா!

1187
0
SHARE
Ad

வாஷிங்டன் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் ‘கடுமையாக’ விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது என ஒப்புக் கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கல் போம்பியோ இன்று செவ்வாய்க்கிழமை சவுதி இளவரசரும் சவுதி அரேபியாவின் ஆட்சியாளருமான சல்மானைச் சந்தித்து ஜமால் கஷோகி விவகாரம் குறித்து விவாதித்திருக்கிறார்.

கஷோகி கொல்லப்பட்டது நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எப்போதும் எழுதி வந்திருப்பவருமான ஜமால் கஷோகி காணாமல் போனது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது.

துருக்கியில் அட்னான் கஷோகி இருந்தபோது, தனது துருக்கியக் காதலியை மணப்பது குறித்த ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் அவர் நுழைந்தார். அவர் அந்தத் தூதரகத்தில் நுழைந்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கின்றனவே தவிர இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதுவரையில் அவர் அந்தத் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை.

உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அவர் என்ன ஆனார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றன. உள்ளே கைகலப்புகள் நிகழ்ந்ததாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.