இன்னும் அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மேற்குறிப்பிட்ட நால்வரில் மூவர் உதவித் தலைவர்களாக வெற்றி பெறுவர் என முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்.
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை மஇகா தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாடு முழுமையிலும் நடைபெற்றது. தற்போது தொகுதி நிலையில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுத் தலைமையகத்தில் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.