Home நாடு முதியோர் நலனில் அக்கறை செலுத்தும் பெகா பி40 திட்டம் அறிமுகம்!

முதியோர் நலனில் அக்கறை செலுத்தும் பெகா பி40 திட்டம் அறிமுகம்!

609
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி சுகாதார அமைச்சு அறிமுகம் செய்ய உள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ சுல்கிப்லி அகமட் கூறினார்.

இந்த வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தொற்றா நோய்களின் (என்சிடி) பிரச்சனைகளைக் களைவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசியர்களின் நலனில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சியாக இத்திட்டம் அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.

பெகா பி40 திட்டத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.