நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு போட்டியைத் தரக்கூடிய வல்லமை பாஸ் கட்சிக்கு இருப்பதை உணர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வேண்டுமென்றே சில தரப்பினர் அவதூறுகளை பரப்பிவருவதாக அவர் கூறினார்.
“அம்னோவை ஒரு போட்டியாளராக அவர்கள் பார்க்கவில்லை, ஆனால் அம்னோவுடன் இணைந்து நாங்கள் ஒரு கூட்டணியைத் தொடங்குவது உட்பட சில சுவாரஸ்யமான அரசியல் நடவடிக்கைகளை தொடங்கும் போது, அவர்களுக்கு அது மிகவும் இக்கட்டான தன்மை மற்றும் சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிட்டது. நாட்டின் அரசியல் நிலையில் எங்களது நிலையைப் புரிந்து கொண்டார்கள். அதனால்தான் தற்போது அவதூறுகள் எழத் தொடங்கியுள்ளன” என நிக் விவரித்தார்.