Home உலகம் டிரம்ப், ஜோங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு!

டிரம்ப், ஜோங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு!

799
0
SHARE
Ad

ஹனோய்: இன்று புதன்கிழமை ஹனோயில் நடைபெற இருக்கும் அமெரிக்கா- வியட்னாமிற்கான இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நொய் பாய் விமான நிலையம் வந்தடைந்தார்.  இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அணு ஆயுத மாநாடும் நடைபெற உள்ளது.  இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை வியட்னாம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்

#TamilSchoolmychoice

இந்தச் சந்திப்பின் போதுஇரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயினகுறிப்பாகதமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.