Home இந்தியா கொழும்பு தாக்குதல்கள்: தாவீத் ஜமாத் அமைப்பு காரணமாக இருக்கலாம்!

கொழும்பு தாக்குதல்கள்: தாவீத் ஜமாத் அமைப்பு காரணமாக இருக்கலாம்!

795
0
SHARE
Ad

புது டில்லி: இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் உள்பட எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 290 பேர் உயிரிழந்து உள்ளதாக இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 500 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் நான்கு இந்தியர்கள் பலியானதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் உறுதி செய்துள்ளார்

இதற்கிடையே,  தமிழகத்தில் செயல்பட்டுவரும் தாவீத் ஜமாத் அமைப்பு இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்குமோ என உளவுத்துறை சந்தேகிக்கிறதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

#TamilSchoolmychoice

ஆயினும், சிறிய பயங்கரவாத அமைப்பான தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது இயலாத காரியம் எனவும் கருதப்படுகிறது. இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பெரிய பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் இந்த குழப்பம் நீடித்து வருகிறது