Home வணிகம்/தொழில் நுட்பம் எக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது

எக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது

986
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அடுத்த ஆண்டு (2020) துபாய் நாட்டில் நடைபெறவிருக்கும் வணிகக் கண்காட்சியில் (எக்ஸ்போ) பெரிய அளவில் பங்கு கொள்ள திட்டமிட்டிருக்கும் மலேசியா, அங்கு சுமார் 1000 வணிக அறிமுகங்களைப் பெறவும், 20 கூட்டு வணிக உடன்படிக்கைகளைக் கையெழுத்திடவும் – ஆக மொத்தம் 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய முதலீடுகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விவரங்களை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின் (படம்) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த வணிக உடன்பாடுகளில் தூய்மையான எரிசக்தி, பசுமைத் தொழில்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனவும் இயோ கூறினார்.

#TamilSchoolmychoice

துபாய் எக்ஸ்போவில் மலேசியாவின் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட முகப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இயோ தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக சுமார் 60 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்றும் இந்தத் தொகையின் பெரும் பகுதியை தனியார் நிறுவனங்கள் செலவிடும் என்றும் இயோ மேலும் தெரிவித்தார்.