Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்ற கலைப்பு எதிரொலி: பேராக் மந்திரி புசார், ராஜா மூடாவை இன்று பிற்பகல் சந்திக்கின்றார்

நாடாளுமன்ற கலைப்பு எதிரொலி: பேராக் மந்திரி புசார், ராஜா மூடாவை இன்று பிற்பகல் சந்திக்கின்றார்

553
0
SHARE
Ad

zamryஈப்போ, ஏப்ரல் 3- இன்று காலையில் பேரரசர்   துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக்  கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் அவரது அறிவிப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30மணியளவில் டாக்டர் ஜம்ரி பேராக் ராஜா மூடா டாக்டர் நஸ்ரின் ஷாவை இஸ்தானா இஸ்கண்டிரியாவில் சந்திக்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர்,  டாக்டர் ஜம்ரி அப்துல் காதர் இன்று  மாலை 5 மணியளவில்  அவரது அலுவலகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேராக் சட்டமன்றம் கலைப்பதைப் பற்றி அறிவிப்பார்.