Home நாடு ஜோ லோ விரைவில் பிடிபடுவார் – ஐஜிபி உத்தரவாதம்

ஜோ லோ விரைவில் பிடிபடுவார் – ஐஜிபி உத்தரவாதம்

863
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் லோ தெக் ஜோ விரைவில் கைது செய்யப்படுவார் என காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

ஜோ லோ கைது குறித்த மேல்விவரங்களை தெரிவிக்காமல், நீதித் துறை விசாரணையை எதிர்நோக்க ஜோ லோ என அழைக்கப்படும் அவர் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதில் தான் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“கடவுள் அருளால் அவரை வெகுசீக்கிரம் கைது செய்து கொண்டு வருவோம். வெகு சீக்கிரம் என்றால் உண்மையிலேயே வெகு சீக்கிரம்” என அப்துல் ஹமிட் பாடோர் உறுதிபடக் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜோ லோவின் இருப்பிடம் தங்களுக்கு தெரிந்து விட்டதாகவும் ஹமிட் பாடோர் அண்மையில் தெரிவித்திருந்தார்.