Home கலை உலகம் பிக்பாஸ் 3 – பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 – பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்

1470
0
SHARE
Ad

சென்னை – தற்போது தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறி வரும் பிக்பாஸ் – 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் 7 பேர் வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா காப்பாற்றப்பட்டார்.

அதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இரண்டாவது நபராக ஒருவரை மக்கள் காப்பாற்றியிருக்கின்றனர் என அறிவித்தார். “நடிகர் கவின்தான் அவர்” என்றும் கமல் அறிவித்தார்.

முதல் வாரத்திலேயே 7 பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடி, யார் முதல் ஆளாக வெளியேறப் போகிறார் என்ற பரபரப்பு கடந்த வாரத்தில் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்த அந்த 7 பேர்  பின்வருமாறு:

  1.  நடிகர் கவின்
  2. சாக்‌‌ஷி
  3. சரவணன்
  4. பாத்திமா பாபு
  5. இயக்குநர் சேரன்
  6. மீரா
  7. மதுமிதா

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் இவர்களில் யார் இரசிகர்களால் வெளியேற்றப்படப் போகிறார் என ஒவ்வொருவராக கமல்ஹாசன் கூறி இறுதியில் பாத்திமா பாபு என்ற அட்டையைக் காட்டினார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், முதல் வாரத்திலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் வாசகர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்துள்ளனர் என அறிவித்தார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாத்திமா பாபு மேடையில் கமல்ஹாசனைச் சந்தித்தார். தனது குடும்பத்தினரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு, பிக்பாஸ் வீட்டில் நடந்த சில மகிழ்ச்சியானத் தருணங்களைக் கொண்ட காணொளிக் குறும்படம் ஒன்றைக் கமல்ஹாசன் போட்டுக் காட்டினார்.